Friday, December 31, 2010
அம்மன் கோவில் தாயே தாயே அன்னை மரியாவே தாயே... வன்னியில் எங்கள்...
வன்னி மண்ணில் நடந்து முடிந்த கொடிய போரின் நினைவோடு, நாம் இரஞ்சி நின்ற தெய்வங்களை நியாயம் கேட்க்கும் ஒரு குரல் இது.
Tuesday, December 28, 2010
வதைகளுக்குள்ளிருந்து வாழ துடிக்கிறது வன்னி மண்...
எழுதுகோல் சற்று எழுத்துக்கள் தேடியே எழுத விளைகின்றது. வன்னி, இது நெருப்பின் மறுபெயர் வந்தோரை வாழ வைத்த வன்னிமண் வலிசுமந்து தினமும் வதைபட்டு நிற்கிறது. துயர்படியும் வாழ்க்கை தினமும் என்றான பின்பும், இடர்நிறை நிகழ்வுகளுக்கு பின்னும் வாழத்துடிக்கிறது வன்னியின் உறவுக்கொடிகள்.
செப்பனிடப்பட்ட பாதைகள் வழியே, செந்நிற ஆட்சியாளர்களின் செப்பனிப்படாத மனங்களுக்குள் சிதைக்கப்பட்டபடியே அமைதியாக வாழ்வு தேடுகிறது வன்னி மண்.
சோலைகள் நிறைந்த வனப்பு நிறை வனங்களும், பூஜைகள் நிறைந்த ஆலயமணியோசையும், ஆங்காங்கே குச்சொழுங்கைகளில் கால்மிதிக்கும் மிதிவண்டிக்காதலரும், இல்லாது சிரிப்பின் சின்னங்கள் அழிக்கப்பட்ட வன்னி சோவையிழந்து கிடக்கிறது.
சொந்தங்கள் இழப்பின் சோகம் ஒருபுறமும், முந்திநம் முகவரிசொன்ன எம் வீடுகளின் இடிபாடுகளும், வந்தவரை எல்லாம் வாருங்கள் என்று வரவேற்று உபசரிந்த அந்த நாட்களை தொலைத்த துயரும் இன்றும் மனங்களை விட்டகலாத போதும் வன்னிமண் மீண்டும் எழுந்திருக்க நினைக்கிறது.
கரம் தாருங்கள் எழுந்திருக்க என்று உறவுகைள உரிமையோடு அழைக்கிறது. உண்மையில் உதவி தேவையானவர்களும், உதவப்பட வேண்டியவர்களும் வன்னியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களே! ஆனாலும் மற்றைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வன்னி மக்களுக்கு கிடைப்பது வெறும் 10 சதவீதமே!
எம் புலம்பெயர்வாழ் உறவுகளே!
உரிமையுடன் கேட்க்கும் அவர்களுக்கு வாஞ்சியுடன் அள்ளிக்கொடுங்கள் என்று எழுதி முடியவில்லை. நீங்கள் அள்ளி அள்ளி கொடுத்தவற்றை நாம் மறக்கவில்லை. ஆனாலும் இயலுமானவரை உங்கள் சக்திக்கு ஏற்ற அளவில் உதவுங்கள் 'சிறுதுளி பெருவெள்ளம்" அது மழைக்குமட்டுமல்ல... மனதுகளுக்கும் தான்..! மறந்துவிடாதீர்கள்..!
செப்பனிடப்பட்ட பாதைகள் வழியே, செந்நிற ஆட்சியாளர்களின் செப்பனிப்படாத மனங்களுக்குள் சிதைக்கப்பட்டபடியே அமைதியாக வாழ்வு தேடுகிறது வன்னி மண்.
சோலைகள் நிறைந்த வனப்பு நிறை வனங்களும், பூஜைகள் நிறைந்த ஆலயமணியோசையும், ஆங்காங்கே குச்சொழுங்கைகளில் கால்மிதிக்கும் மிதிவண்டிக்காதலரும், இல்லாது சிரிப்பின் சின்னங்கள் அழிக்கப்பட்ட வன்னி சோவையிழந்து கிடக்கிறது.
சொந்தங்கள் இழப்பின் சோகம் ஒருபுறமும், முந்திநம் முகவரிசொன்ன எம் வீடுகளின் இடிபாடுகளும், வந்தவரை எல்லாம் வாருங்கள் என்று வரவேற்று உபசரிந்த அந்த நாட்களை தொலைத்த துயரும் இன்றும் மனங்களை விட்டகலாத போதும் வன்னிமண் மீண்டும் எழுந்திருக்க நினைக்கிறது.
கரம் தாருங்கள் எழுந்திருக்க என்று உறவுகைள உரிமையோடு அழைக்கிறது. உண்மையில் உதவி தேவையானவர்களும், உதவப்பட வேண்டியவர்களும் வன்னியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களே! ஆனாலும் மற்றைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வன்னி மக்களுக்கு கிடைப்பது வெறும் 10 சதவீதமே!
எம் புலம்பெயர்வாழ் உறவுகளே!
உரிமையுடன் கேட்க்கும் அவர்களுக்கு வாஞ்சியுடன் அள்ளிக்கொடுங்கள் என்று எழுதி முடியவில்லை. நீங்கள் அள்ளி அள்ளி கொடுத்தவற்றை நாம் மறக்கவில்லை. ஆனாலும் இயலுமானவரை உங்கள் சக்திக்கு ஏற்ற அளவில் உதவுங்கள் 'சிறுதுளி பெருவெள்ளம்" அது மழைக்குமட்டுமல்ல... மனதுகளுக்கும் தான்..! மறந்துவிடாதீர்கள்..!
Monday, December 27, 2010
வடுக்களை வகையாய் சுமந்தபடி நின்கிறது வன்னி மண்
அடுப்புக்குள் நெருப்பணைந்த நாட்கள் தெரியாது எங்கள் வீடுகளில், வந்த விருந்தினர் உண்ணாமல் போனதில்லை எங்கள் மண்ணில். வந்தவரை எல்லாம் வாழவைத்து பெருமை பெற்ற மண் எங்கள் வன்னி மண்..!
துயர்கள் சூழ துடித்திருக்கிறது எங்கள் சந்ததியேன்று. காலச்சூற்சிக்குள் சுற்ற மறுத்த எம் மண், காலனின் கடைக்கண் பார்வைக்குள் அகப்பட்டது சோகம். நின்று நிதானிக்கும் நேரங்கள் எதுகுமின்றி நொடிப்பொழுதில் நாங்கள் அகதியாக்கப்பட்டடோம், அனாதரவானோம், அனாதைகளானோம்..!
கூட இருந்த சொந்தங்கள், கூடபடித்த தோழர்கள், எல்லோரும் அழிந்து போக நடைபிணமாய் நாங்கள் வாழ்கின்றோம்.
பச்சைப்பசேல் என்று பரந்து விரிந்திருந்த வன்னி மண் இன்று மீண்டும் வாழத்துடிக்கிறது.
செப்பினப்பட்டுள்ளன பாதைகள், ஆனாலும் செப்பனிப்படாத மனதுடன் ஆட்சியாளர்..!
நாட்கள் நகர்ந்து இரண்டு வருடங்களை தொடுகின்றபோதும், நாம் நம்பியிருந்த உதவிகளும், நம்மால் முடியும் என்ற இறுமாப்பும் இல்லாமலே போனது.
தோட்டம் செய்தோம், வயல்கள் விதைத்தோம், எதுகும் செய்ய முடியாத சோகம். இறைப்பதற்க்கு நீர் இறைக்கும் இயந்திரம் இல்லை, உழுவதற்க்கான கூலி கொடுத்த இருந்த பணம் அழிந்துவிடும். இல்லாத உழைப்பில் எங்கே இருக்கிறது வருமாணம், நான்கு தகரம், நாலு தடி வீடு போட்டுக்கொள்ள வேண்டியது தானே என்பதே எல்லோர் பேச்சும். முடியுமா என்று சிந்திப்பவர்கள் குறைவு....!
பாம்புகளோடும், அறனைகளோடும் படுத்துறங்கும் பயங்கரம் கருத்து சொல்பவர்களுக்கு இருக்காது என்பது எங்களுக்கு தெரியும். கொட்டும் மழைக்கும் கொழுத்தும் வெயிலுக்கும் நாங்கள் பழக்கப்பட்டவர்கள் தான். ஆனாலும் வீட்டுக்குள் பெய்யும் மழை எங்களுக்கு பழையதே!
உறவுகளே இது உங்களுக்காய் எழுதப்பட்டதல்ல. எங்கள் உள்ளத்து குமுறல் அதை சொன்னோhம்.!
நன்றி..
துயர்கள் சூழ துடித்திருக்கிறது எங்கள் சந்ததியேன்று. காலச்சூற்சிக்குள் சுற்ற மறுத்த எம் மண், காலனின் கடைக்கண் பார்வைக்குள் அகப்பட்டது சோகம். நின்று நிதானிக்கும் நேரங்கள் எதுகுமின்றி நொடிப்பொழுதில் நாங்கள் அகதியாக்கப்பட்டடோம், அனாதரவானோம், அனாதைகளானோம்..!
கூட இருந்த சொந்தங்கள், கூடபடித்த தோழர்கள், எல்லோரும் அழிந்து போக நடைபிணமாய் நாங்கள் வாழ்கின்றோம்.
பச்சைப்பசேல் என்று பரந்து விரிந்திருந்த வன்னி மண் இன்று மீண்டும் வாழத்துடிக்கிறது.
செப்பினப்பட்டுள்ளன பாதைகள், ஆனாலும் செப்பனிப்படாத மனதுடன் ஆட்சியாளர்..!
நாட்கள் நகர்ந்து இரண்டு வருடங்களை தொடுகின்றபோதும், நாம் நம்பியிருந்த உதவிகளும், நம்மால் முடியும் என்ற இறுமாப்பும் இல்லாமலே போனது.
தோட்டம் செய்தோம், வயல்கள் விதைத்தோம், எதுகும் செய்ய முடியாத சோகம். இறைப்பதற்க்கு நீர் இறைக்கும் இயந்திரம் இல்லை, உழுவதற்க்கான கூலி கொடுத்த இருந்த பணம் அழிந்துவிடும். இல்லாத உழைப்பில் எங்கே இருக்கிறது வருமாணம், நான்கு தகரம், நாலு தடி வீடு போட்டுக்கொள்ள வேண்டியது தானே என்பதே எல்லோர் பேச்சும். முடியுமா என்று சிந்திப்பவர்கள் குறைவு....!
பாம்புகளோடும், அறனைகளோடும் படுத்துறங்கும் பயங்கரம் கருத்து சொல்பவர்களுக்கு இருக்காது என்பது எங்களுக்கு தெரியும். கொட்டும் மழைக்கும் கொழுத்தும் வெயிலுக்கும் நாங்கள் பழக்கப்பட்டவர்கள் தான். ஆனாலும் வீட்டுக்குள் பெய்யும் மழை எங்களுக்கு பழையதே!
உறவுகளே இது உங்களுக்காய் எழுதப்பட்டதல்ல. எங்கள் உள்ளத்து குமுறல் அதை சொன்னோhம்.!
நன்றி..
சின்னக் கண்ணில் என்ன ஈரம்....
போர் தின்று துப்பிய எம் சிறுவர்கள் அனாதைகளாய் அலைகின்றனர். ஈர நெஞ்சங்கள் சில ஆசையாய் உதவுகின்றன. காலத்தின் தேவையிது. இன்றைய காலத்தின் பாடல் என்றோ ஒருனாள் இசைக்கப்பட்டிருக்கிறது.
சூரிய அஸ்தமானம்....
இது ஒரு கனாக்காலம் காலைச் சூரியோதயத்தை இரசித்ததும், மாலை மறைவை சுவைத்ததும் இன்று ஒரு கனாக்காலம். இந்த நிலைக்காய் ஏங்கியபடி நிற்க்கிறது வன்னி மண்...!
Subscribe to:
Posts (Atom)



